உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாதியை கூறி அவதுாறு இருவர் மீது வழக்கு

ஜாதியை கூறி அவதுாறு இருவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: குறிப்பிட்ட சமுதாயத்தை அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சில்வார்பட்டி முத்துக்காமாட்சி, ஜெயமங்கலம் பெரியசாமி ஆகிய இருவர் மீது ஜெயமங்கலம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி மேலத்தெரு முத்துக்காமாட்சி. ஜெயமங்கலத்தைச் சேர்ந்த இவரது நண்பர் பெரியசாமி. இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த தவமணிராஜா புகாரில், ஜெயமங்கலம் போலீசார் முத்துக்காமாட்சி, பெரியசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி