உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதியின்றி செம்மண் அள்ளிய இருவர் மீது வழக்கு

அனுமதியின்றி செம்மண் அள்ளிய இருவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் முகேஷ், முத்துப்பாண்டி இருவரும் அனுப்பபட்டி அருகே உள்ள நிலத்தில் டிப்பர் லாரியில் இயந்திரம் மூலம் செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனர். ஆண்டிபட்டி பிட் 1 வி.ஏ.ஓ., ஷியாம்சுந்தர் அந்த வழியாக சென்றபோது அவர்களிடம் மண் அள்ளுவதற்கு அனுமதி உள்ளதா என்று கேட்டுள்ளார். அனுமதி ஏதும் இல்லாததால் வாகனங்களை எடுத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். வி.ஏ.ஓ., புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை