அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு
தேனி; தேனி அருகே அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த அபிமன்யூ, கதிர்வேல் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் தெரு வியாசகன் 24. இவரது தந்தை கார்த்திகேயன் 43. தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வியாசகன்கண்டக்டராகவும், கார்த்திகேயன் டிரைவராக உள்ளனர். அக்.12ல் தந்தை மகன் இருவரும் குச்சனுாருக்கு செல்லும் அரசு பஸ்சை இயக்கினர்.பஸ் பழனிசெட்டிபட்டிக்கு சென்றபோது டூவீலரில் வந்த அதேப்பகுதிடி.பி.என்., ரோட்டை சேர்ந்த அபிமன்யூ, போடி விஸ்வாசபுரம் கதிர்வேல் ஆகிய இருவர் கட் அடித்து சென்றனர். இதனை டிரைவர் கார்த்திகேயன் தட்டிக்கேட்டார். பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது வழிமறித்த இருவர் டிரைவர் கார்த்திகேயனை தாக்கி, அரசு பணிசெய்ய விடாமல் தடுத்தனர். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். குச்சனுார் சென்று மீண்டும் பழனிசெட்டிபட்டி டெப்போவிற்கு சென்று பஸ்சை நிறுத்திய டிரைவர்கார்த்திகேயன்மருத்துவமனை சென்றார். வியாசகன் கணக்கை ஒப்படைக்கச் சென்ற போது டூவீலரில் சென்ற அபிமன்யூ, கதிர்வேல் மற்றும்8 நபர்கள் இணைந்து கம்பு, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜெயபாலன் அபிமன்யூ., கதிர்வேல்உட்பட10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.