சான்றிதழ் வழங்கும் விழா
போடி: சிலமலையில் வ.உ. சிதம்பரனார் அரசு அலுவலர்கள் அறக்கட்டளை, தியாக சுடர் பென்னி குவிக் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். அறங்காவலர் அர்ஜுன பெருமாள், செயலாளர் பாண்டியராஜ், கிராம கமிட்டி தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். பொருளாளர் குருநாதன் வரவேற்றார். விழாவில் தையல் பயிற்சி பெற்ற 42 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.