கல்லூரி மாணவர் தற்கொலை
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு சவுத் டிவிஷனைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் 23. இவர், திருவனந்தபுரம் பாளையத்தில் தங்கும் விடுதியில் தங்கி தைக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.அவர் தங்கும் விடுதி அருகே தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மியூசியம் போலீசார் நடத்திய விசாரணையில் ரவிசந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.