மேலும் செய்திகள்
வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
25-Oct-2024
கம்பம்: போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பறிமுதல் வாகனங்களை ஏலம் விட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி ஆகிய சப்டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு சப்டிவிசனிலும் குறைந்தது 5 ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேசனிலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கம்பம் வடக்கு, தெற்கு, உத்தமபாளையம், சின்னமனுார் ஸ்டேஷன்கள் மட்டும் குறைந்தது 500 முதல் ஆயிரம் டூலீவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ஆண்டு கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து பாம்புகள் , பூரான்கள் என விஷ ஜந்துக்கள் வாழ்விடமாக ஸ்டேஷன் வளாகங்கள் மாறி வருகின்றன. போலீஸ் ஸ்டேசன்களில் புகார் தர வருபவர்களும், போலீசாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. உத்தமபாளையம் ஸ்டேஷனில் வெளியே அமர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்த போது, பாம்பு ஒன்று வந்து களேபரம் ஆகிவிட்டது. எனவே பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Oct-2024