உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு

 ஐயப்ப பக்தர்கள் பயன்பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு

மூணாறு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயன் பெறும் வகையில் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்வதற்கும், அவர்களின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வசதியாக கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. 2026 ஜன.20 வரை செயல்படும். 24 மணி நேரமும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவி மையம் மூலம் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் சேவையை பெறலாம். கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண்: 85479 85727.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்