மேலும் செய்திகள்
குழந்தையுடன் தாய் மாயம்
03-Jun-2025
போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சோனியா 38. இவர் கணவரை விட்டு பிரிந்து ஓராண்டாக அங்கு உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் யுவஸ்ரீ 19.,க்கு திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சோனியா தனது மகனுடன் ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யுவஸ்ரீ இல்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. சோனியா புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
03-Jun-2025