இன்று நீதிமன்றம் புறக்கணிக்க முடிவு
தேனி: தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். செஞ்சி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் காமராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 21ல் (இன்று) தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.