உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மா மர சாகுபடிக்கு கல்தார் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்த வேண்டாம்

 மா மர சாகுபடிக்கு கல்தார் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்த வேண்டாம்

தேனி: மாவட்டத்தில் சுமார் 9.240 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நீலம், பங்கனப்பள்ளி, பெங்களூரா, செந்துரா ஆகிய ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மா அறுவடை முடிந்த பின் மர வளர்ச்சி, காய் பிடித்தல், பூக்கும் தன்மையை மேம்படுத்த விவசாயிகள் சிலர், கல்தார் என்ற வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்து கின்றனர். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். மண் உபயோகம் இல்லாததாக மாறும். பூச்சி, நோய் தாக்குதல் அதிகரித்து, மகசூல் பாதிக்கும். மாம்பழங்கூள் தரம் குறையும். விவசாயிகள் கல்தார் மருந்து பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி