கவிழ்ந்த லாரியில் உயிர் தப்பிய டிரைவர்
மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டியில் உள்ள அரசு மாட்டு பண்ணை வளாகத்தினுள் உள்ள கிராண்டீஸ் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கிராண்டீஸ் மரத்தடிகள் லாரி மூலம் பெரும்பாவூர் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மலை மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி பண்ணை வளாகத்தினுள் எதிர்பாராத வகையில் கவிழ்ந்தது. அதில் டிரைவர் அடிமாலியைச் சேர்ந்த பிஜூ 40, சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.