உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வறண்டது சுருளி அருவி

வறண்டது சுருளி அருவி

கம்பம்:மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தினமும் திரளாக வருகின்றனர். கோடை காலமான மார்ச் முதல் மே வரை அருவி வறண்டிருக்கும். ஜுனில் மழை பெய்து அருவியில் தண்ணீர் கொட்டும். ஆனால் இந்தாண்டு எல்நினோ காரணமாக ஜுனில் மழை பெய்யவில்லை. அத்துடன் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் செப்டம்பரில் அருவியில் தண்ணீர் விழுவது முற்றிலுமாத நின்று பாறைகள் தெரிகின்றன. அருவிக்கு குளிக்கவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ