உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

குமுளியில் கேரள கழிவுகள் கொட்ட முயன்றோருக்கு அபராதம்

கூடலுார் : தேனி மாவட்டம், கம்பம் வனத்துறையினர் தமிழகம்- - கேரளா எல்லையான குமுளி மலைப்பாதையில் ரோந்து சென்றனர். கேரளா பீர்மேடு அருகே பாம்பனாரைச் சேர்ந்த மினி லாரியில் ரப்பர் மற்றும் பாலிதீன் கழிவுகளை மலைப்பாதையில் கொட்ட முயன்றனர்.அதைக் கண்ட வனத்துறையினர் தடுத்து நிறுத்தி, வாகனத்தில் வந்த பாம்பனாரைச் சேர்ந்த சுபாஷ், தாமஸ் ஆகியோருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மினிலாரியை பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் கூறியதாவது: மீண்டும் இதுபோல செய்தால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட கழிவுகளுக்கு ஏற்றார்போல அபராதத் தொகை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை