உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குரூப் 2, 2ஏ தேர்வு ரத்தால் வினாத்தாள் திரும்ப பெற்றனர்

குரூப் 2, 2ஏ தேர்வு ரத்தால் வினாத்தாள் திரும்ப பெற்றனர்

தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ரத்து செய்யப்பட்டதால் தேனியில் நேற்று தேர்வு எழுதியவர்களிடம் வினாத்தாளை திரும்ப பெற்றதால் அதிருப்தி அடைந்தனர். தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லுாரியில் குரூப் 2,2ஏ தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நேற்று காலை, மதியம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை தேர்வு எழுத 123 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு துவங்கிய சில நிமிடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளை திரும்ப பெற்று தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறை கண்காணிப்பாளர்கள் அறிவித்து தேர்வர்களை வெளியே அனுப்பினர். மதியம் தேர்வு நடைபெற வில்லை. அதிருப்தி அடைந்த தேர்வர்கள்'விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்க உள்ளதால் சில மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்த வாயப்்பில்லை,' என வருத்தத்துடன் கூறி சென்றனர்.

வினாத்தாள் திரும்ப பெற்றனர்

தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லுாரியில் குரூப் 2,2ஏ தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நேற்று காலை, மதியம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை தேர்வு எழுத 123 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு துவங்கிய சில நிமிடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளை திரும்ப பெற்று தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறை கண்காணிப்பாளர்கள் அறிவித்து தேர்வர்களை வெளியே அனுப்பினர். மதியம் தேர்வு நடைபெற வில்லை. அதிருப்தி அடைந்த தேர்வர்கள்'விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்க உள்ளதால் சில மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை,' என வருத்தத்துடன் கூறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ