உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காவலாளி கொலை: மெட்டல் டிடெக்டர் மூலம் நீர்நிலைகளில் ஆய்வு

காவலாளி கொலை: மெட்டல் டிடெக்டர் மூலம் நீர்நிலைகளில் ஆய்வு

மூணாறு : மூணாறு அருகே காவலாளி கொலை செய்யப்பட்டு 20 நாட்கள் ஆகியும் துப்பு எதுவும் கிடைக்காததால், 'மெட்டல் டிடெக்டர்' மூலம் போலீசார் நீர்நிலைகளில் ஆய்வு செய்து விசாரித்தனர். கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷன் ராஜபாண்டி 68. தனியார் ஏஜன்சி மூலம் காவலாளியாக பணியாற்றினார். அவர் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.23ல் பணியில் ஈடுபட்டிருந்த போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மூணாறு டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என, கடந்த வாரம் போலீசார் அறிவித்தனர். இடுக்கி எஸ்.பி. சாபு மாத்யூ தனிப்படை போலீசாருடன் வழக்கு விசாரணை குறித்து இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொலை நடந்து 20 நாட்கள் ஆகியும் கொலையாளி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தேடும் பணியில் நேற்று போலீசார் ஈடுபட்டனர். அதற்கு இடுக்கியைச் சேர்ந்த சிறப்பு குழுவினர் 'மெட்டல் டிடெக்டர்' பயன்படுத்தி ஆறு, ஹெட் ஒர்க்ஸ் அணை நீர்ப்பிடிப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதில் எதுவும் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை