உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

விதை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தேனி : தேனியில் தனியார் மண்டபத்தில் வேளாண் துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தகாக்கப்பயிற்சி நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தலைமை வகித்தார். மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் சிங்காரலீனா முன்னிலை வகித்தார். விதைகள் விற்பனை செய்யும் கடைகளில் பகுப்பாய்வு முடிவு, பதிவு சான்று, இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல்களை முறையாக பராமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதையின் பெயர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி தேதி, உற்பத்தியாளர் பெயர் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து ரசீது வழங்க வேண்டும். நிகழ்வில் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர், வேளாண் அலுவலர் மணிகண்ட பிரசன்னா, தோட்டக்கலை அலுவலர் சரவணக்குமார், விதை ஆய்வாளர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை