உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பச்சை மிளகாயில் ஊடு பயிராக அகத்திக்கீரை பயிரிடுவதில் ஆர்வம்

பச்சை மிளகாயில் ஊடு பயிராக அகத்திக்கீரை பயிரிடுவதில் ஆர்வம்

போடி; போடி பகுதியில் பச்சை மிளகாய்க்கு ஊடுபயிராகவும், உரத்திற்காகவும் அகத்திக்கீரை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.போடி அருகே விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், சிலமலை, ராசிங்காபுரம், அம்மாபட்டி, தேவாரம் அருகே பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். பச்சை மிளகாய்க்கு சில நாட்கள் விலை இல்லாமல் போனால் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்டும் வகையில் ஊடு பயிராக அகத்தி கீரைகளை நடவு செய்து வருகின்றனர். 6 அடி உயரம் அகத்தி வளர்ந்த பின்பு அதை வெட்டி பருத்தி செடியின் அடியில் புதைத்து உரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயிரிடும் பயிர்களுக்கு அதிக பலன் தரும். பலர் அகத்தி குச்சிகள், கீரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில் : மழை இல்லாத காலங்களில் பச்சை மிளகாய், பருத்திக்கு சில நேரங்களில் உரிய விலை கிடைப்பது இல்லை. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை மிளகாயில் ஊடுபயிராக அகத்திக்கீரை பயிரிட வேண்டியுள்ளது. பருத்தி சாகுபடியிலும் ஊடு பயிராகவும், உரத்திற்காகவும் அகத்தி செடி நடவு செய்து உள்ளோம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ