உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு

கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு

மூணாறு: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படும் என கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது. தேர்வு எழுதிய 4.27 லட்சம் மாணவ, மாணவிகள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் வினா தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதால் பொது தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படும் எனவும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை