மேலும் செய்திகள்
இன்று முதல் கோடை விடுமுறை
25-Apr-2025
மூணாறு: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படும் என கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது. தேர்வு எழுதிய 4.27 லட்சம் மாணவ, மாணவிகள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் வினா தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதால் பொது தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படும் எனவும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
25-Apr-2025