உள்ளாட்சி தலைமை பொறுப்பு: பெண்களுக்கு அதிகம் ஒதுக்கீடு
மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைமை பொறுப்பு பெண்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டது. இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணியில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் பிரிவினரின் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளி யிட்டது. பொதுவாக தலைமை பொறுப்பு வகிக்கும் பிரிவினரை குலுக்கல் முறையில் தேர்வு செய்வது வழக்கம். இந்த முறை மக்கள் தொகையை பொறுத்து தலைமை பொறுப்பின் பிரிவு தேர்வு செய்யப்பட்டது. மாநிலத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளில் மேயர் பொறுப்பு பெண் களுக்கு மூன்றும், பொதுவில் மூன்றும் ஒதுக்கப்பட்டது. 14 மாவட்ட ஊராட்சிகளில், இடுக்கி உள்பட ஏழு மாவட்ட ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 152 ஊராட்சி ஒன்றியங்களில், 77 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பொறுப்பு பெண்கள் வகிக்கின்றனர். 941 ஊராட்சிகளில் 471 ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பு பெண் களுக்கு ஒதுக்கப் பட்டது. இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, தொடுபுழா நகராட்சி ஆகியவற்றில் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 4ம், 52 ஊராட்சிகளில் 26 ஊராட்சிகளிலும் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டது. மூணாறு ஊராட்சி பொதுவிலும், தேவிகுளம் ஊராட்சி ஆதிதிராவிடர் பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டது.