மகன் மாயம் தாய் புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி 45, இவரது மகன் நவீனின் 23, ஐ.டி.ஐ., படித்து முடித்து வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். டிசம்பர் 3ல் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், கிருஷ்ணவேணி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்