குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு
போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்டவை குண்டேரி, பனங்கோடை மலைக் கிராமம். இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.காபி, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பணப் பயிர்களை பயிரிட்டு உள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான மண் ரோட்டில் விவசாயிகள் நடந்து சென்று வந்தனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் முட்புதர் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை சீரமைத்திட கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விளை பொருட்கள் உரிய நேரத்தில் கொண்டு வர முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.