உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நுாலகத்தில் ஆட்சி மொழி வார விழா

நுாலகத்தில் ஆட்சி மொழி வார விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழா தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ தலைமையில் நடந்தது. தேனி மைய முன்னாள் நூலகர் சந்திரசேகர், ஆண்டிபட்டி நூலகர் கவிதா, தன்னார்வலர் பொன்முடி ஆகியோர் தமிழின் முக்கியத்துவம் குறித்து பேசினர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டிமன்ற நடுவர் இளங்கோவன், முன்னாள் பி.டி.ஓ., கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். உமா நாராயணன் பதிப்பகம் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆண்டிபட்டி வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ