உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நீர் கால்வாய் வழியாக திறப்பு

வைகை அணை நீர் கால்வாய் வழியாக திறப்பு

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 2ம் போக பாசன நிலங்களுக்கு கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது.வைகை அணையில் தேக்கப்படும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாசனத்திற்கு அணையில் திறக்கப்பட்ட நீர் டிசம்பர் 12ல் நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள 2ம் போக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் நேற்று காலை கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 62.89 அடியாக இருந்தது.அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 2305 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ