| ADDED : நவ 16, 2025 04:23 AM
கஞ்சா வைத்திருந்தவர் கைது தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ.,முகமது யஹ்யா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மகாலட்சுமி நகர் பகுதியில் நின்றிருந்த ஆண்டிபட்டி ராமலிங்காபுரம் முத்துகிருஷ்ணனை விசாரித்தனர். அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 10கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்தனர். இடையூறாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு தேனி: தேனியில் மதுரை ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோக்கள் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதனால் தேனி வினோத்குமார், தாடிச்சேரி பிரபாகரன், அரண்மனைப்புதுார் முத்துராஜ், தமிழன், புவனேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர். புகையிலை விற்றவர் கைது தேனி: கருவேல்நாயக்கன்பட்டியில் தேனி எஸ்.ஐ., ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பஸ் ஸ்டாப் அருகே சுந்தரேச பெருமாள் 44, என்பவரது கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனை செய்வதற்காக ரூ.2950 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதனை கைப்பற்றி சுந்தரேச பெருமாளை கைது செய்தனர். இளம் பெண் மாயம் கடமலைக்குண்டு: காமன்கல்லூரைச் சேர்ந்தவர் ரமேஷ், இவரது மகள் ஜெயஸ்ரீ 19, நர்சிங் படிப்பு முடித்த இவர் தேனியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். காமன் கல்லூரில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். விடுப்பு முடிந்து மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் வேலை பார்த்த மருத்துவமனையில் கேட்ட போது அங்கு வரவில்லை என்றனர். இதுகுறித்து தந்தை ரமேஷ் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.