ரேஷன் பணியாளர்கள் செயற்குழு கூட்டம்
தேனி : வீரபாண்டியில் அரசு நியாயவிலை கடைபணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொருளாளர் பொன்அமைதி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மகாலிங்கம், நிர்வாகிகள் அய்யனார், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில பொருளாளர் பொன்அமைதி கூறுகையில், 'மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அவரை கண்டித்து (அக்.16) காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்., 18 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்,' என்றார்.