உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடுப்புச்சுவர் இன்றி விபத்து அபாயம்

தடுப்புச்சுவர் இன்றி விபத்து அபாயம்

போடி : தேனி --போடி வழித்தடத்தில் அமைந்துள்ளது போஜன் பார்க். தினமும் இந்த ரோட்டில் தமிழக, கேரளா செல்லும் வாகனங்களும், தேனியில் இருந்து போடிக்கு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன.போடி போஜன் பார்க்கில் இருந்து கட்டபொம்மன் சிலை ரோட்டிற்கு வளைந்து செல்லும் பாதை குறுகலாகவும், சாக்கடை தடுப்புச்சுவர் இல்லாமலும் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை ஏற்படுகிறது. வளைவில் திரும்பும் போது சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குறுகலான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை தடுப்புச் சுவர், எச்சரிக்கை பலகை அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ