உறைவாள் போட்டியில் பள்ளி மாணவர் சாதனை
கூடலுார்; உறை வாள் தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கூடலுார் மாணவர் கிரிதரன் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான உறைவாள் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் கூடலுார் என்.எஸ்.கே.பி., பள்ளி மாணவர் கிரிதரன் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் டிசம்பர் முதல் வாரத்தில் ஹரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரை பள்ளி தாளாளர் ராம்பா, தலைவர் பொன் குமரன், பொருளாளர் சிவா பகவத், தலைமையாசிரியர் வெங்கட்குமார், உடற்கல்வி இயக்குநர் கருத்த பாண்டியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.