பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
ஆண்டிப்பட்டி:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காப்புக்காடு விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 46 மாணவர்கள், ஐந்து ஆசிரியைகளுடன் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டிப்பட்டி அடுத்துள்ள குன்னுார் டோல்கேட் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.இதில், ஆசிரியைகள், மாணவ - மாணவியர், பஸ் டிரைவர் உட்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்கள், தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.