பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கூடலுார்: கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் வெங்கட் குமார் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார். பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர். அனைத்து படைப்புகளையும் ஆசிரியர் குழு பார்வையிட்டது. படைப்புகளை தேர்வு செய்து சுதந்திர தினத்தன்று பரிசுகள், சான்றிதழ்கள் வழங்க உள்ளனர். அறிவியல் ஆசிரியர்கள் சுரேஷ்,ஏற்பாடுகளை செய்திருந்தனர்.