மாநில கபாடி போட்டி துவக்கம் பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்பு
பெரியகுளம்:லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான கபாடி விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவதற்கு திறமையை காட்டிவருகின்றனர். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபாடி போட்டிகள் மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் போட்டி நேற்று துவங்கியது. இதில் சென்னை, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், மதுரை,தேனி, விருதுநகர், சிவகங்கை, கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உட்பட தமிழகம், பல்வேறு பகுதியிலிருந்து 61 அணிகள் விளையாடுகின்றனர். போட்டிகளை பள்ளி தலைவர் ஓ.ராஜா துவக்கி வைத்தார். இயக்குனர் டாக்டர் முத்துகுகன், தாளாளர் ஐஸ்வர்யா, முதல்வர் பாரதரத்தினம் முன்னிலை வகித்தனர். போட்டிகள் 14, 17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகளுக்கு நடக்கிறது. நேற்று மாணவிகளுக்கு இடையே போட்டியும், இன்று மாணவர்களுக்கான போட்டி நடக்கிறது. நாளை (ஜூலை 26) இறுதி போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் நாக்-அவுட் போட்டிகளாக நடந்து வருகிறது. முதல், இரண்டாம் இடம் வெற்றி பெறும் அணிகள் தேசிய அளவிலான கபாடி போட்டியில் விளையாட உள்ளனர்.உடற்கல்வி இயக்குனர் விமலேஸ்வரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.