பள்ளி சென்ற மாணவர் மாயம்
கூடலுார்; கூடலுார் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகன் மன்ஜீத் 16. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் செல்வதாக கூறிச் சென்ற மாணவர் பள்ளிக்குச் செல்லாமல் மாயமாகியுள்ளார். அக்கம் பக்கம் தேடியும் காணவில்லை.கூடலுார் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.