புத்தகத்திருவிழாவில் புத்தகங்கள் வாங்க குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள்
தேனி ; புத்தகத்திருவிழாவில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த புத்தகத் திருவிழா நாளை (ஏப்.1ல்) நிறைவடைகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி பழனிசெட்டிபட்டியில் 3ம் ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. தினமும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்ற இலக்கிய அரங்கம், பிரபல பேச்சாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கம் நடந்தது. தினமும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த ரூ.100, 200 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள், இல்லத்தரசிகள், வாசிப்பாளர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை தேர்வு செய்து, வாங்கிச் சென்றனர். விடுமுறை தினமான நேற்று மாலை முதல் அதிக அளவில் மாணவர்கள், பெற்றோருடன் வருகை தந்தனர். புத்தக திருவிழா நாளை (ஏப்.1ல்) நிறைவடைகிறது.