விஷம் குடித்து தற்கொலை
ஆண்டிபட்டி : டி.பொம்மிநாயக்கன்பட்டி காந்தி நகர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 51, பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் பாதிப்பால் கால் விரல்களை வெட்டி எடுத்துள்ளனர். காலில் ஆறாத புண் ஏற்பட்டதால் மனம் வெறுத்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி இறந்து விட்டார். மனைவி மகாலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.