விரக்தியில் வாலிபர் தற்கொலை
தேனி : தேனி பாலகிருஷ்ணாபுரம் முரளி கவுசிக் 25. டிப்ளமோ மெக்கானிக் பட்டதாரி. அரசு வேலைக்கு முயற்சித்தார். உறவினரிடம் ரூ.6 லட்சம் வழங்கினார். பின், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பற்றிய தீயை அணைத்த உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.தாய் சுமித்ரா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.