இடையூறு செய்தவர் கைது
தேனி: உத்தமபாளையம் இந்திரா காந்தி நகர் முகமதுகபீப் 56. இவர் சித்திரைத் திருவிழா நேரத்தில் வீரபாண்டி முல்லையாற்றின் பாலம் அருகே நின்று கொண்டு, பெண்களை, பக்தர்களை ஆபாசமாக பேசி, திட்டி இடையூறு ஏற்படுத்தினார். அவரை, வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் கைது செய்தார்.