மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஆண்டிபட்டி: தெப்பம்பட்டி அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் அப்பகுதியில் வாகன சோதனையில் இருந்தார். அப்போது டிராக்டரில் ஒன்றரை யூனிட் ஓடை மணல் இருந்துள்ளது. போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.