உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரியகுளம் :பெரியகுளம் ஒன்றியம் ஏ..வாடிப்பட்டி அருகே ஏ.புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி 35. கைலாசபட்டி கோவில் காடு பகுதியில் ஷாஜகான் தென்னந்தோப்பில் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டிக்கொண்டிருந்தார். தென்னை மரத்தில் காய்ந்த மட்டையை இழுக்கும் போது உயரழுத்த மின்கம்பியில் மட்டைபட்டு ஆண்டிச்சாமி மீது மின்சாரம் பாய்ந்தது. மரத்திலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஆண்டிச்சாமி பலியானார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை