மேலும் செய்திகள்
மனநோயாளி தற்கொலை
10-Sep-2025
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு முகமதுமீரான் 26, என்ற இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெரு சையது அப்தாகிர் மகன் முகமது மீரான் 26, நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமா கடந்த வாரம் க.புதுப்பட்டியில் கொலை செய்யப்பட்டவர் அவரது நண்பர்களுடன் மது அருந்திய போது எழுந்த தகராறில் முகமது மீரானை கத்தியால் கழுத்தில் குத்தினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். எனவே இவரது கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தமபாளையம் டி. எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், 'இறந்த முகமது மீரான் நண்பர்களுடன் இரவு மது அருந்த சென்றிருக்கலாம். அங்கு இருந்த எதிரிகள் திட்டமிட்ட படி போதையில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம்,' என்றனர்.
10-Sep-2025