மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
களக்காடு:நெல்லை மாவட்டம், களக்காடு அரசு பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவ- --- மாணவியர் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். சில நாட்களாக மாணவ - -மாணவியருக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக பள்ளியில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.புகைப்படம் எடுக்க சென்ற மாணவ - -மாணவியரிடம், 'நெற்றியில் உள்ள திருநீறு, குங்குமத்தை அழிக்க வேண்டும்; தலையில் உள்ள பூக்களை அகற்ற வேண்டும்' என, கூறியதாக தகவல் பரவியது. தொடர்ந்து, களக்காடு பாஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் திரண்டு பள்ளியில் புகார் தெரிவித்தனர்.அவர்களிடம் தலைமை ஆசிரியர் மதியரசு, என்.சி.சி. ஆசிரியர் செல்லப்பாண்டியன், எஸ்.ஐ.,க்கள் பழனி, கார்த்திக் பேச்சு நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் யாரும் அப்படி கூறவில்லை என்றும், இனி இதுபோல் சர்ச்சை நடக்காமல் பார்த்துக் கொள்வதற்காகவும் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
29-Sep-2025
25-Sep-2025