சிறுமிக்கு முத்தம்; வாலிபர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், 20; கட்டட தொழிலாளி. இவர் அப்பகுதி சிறுமி ஒருவருடன் பழகினார். பிப்., 14 காதலர் தினத்தன்று, சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். சிறுமியுடன் போனில் அதை செல்பி எடுத்துள்ளார். விஷயம் கசிந்ததால், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இசக்கியப்பனை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.