யானைக்கு பழம் வழங்க தடை
தெய்வானையை விட வயது அதிகம் உள்ளது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானை காந்திமதி. 55 வயதாகும் காந்திமதி தினமும் மாலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். தற்போது யானை துதிக்கையால் ஆசி தருவதற்கும் பக்தர்களிடம் தேங்காய், பழங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகன் ராமதாஸ் மற்றும் உதவியாளர்கள் யானையை கவனித்து வருகின்றனர்.