உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடை ஊழியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மகன் கைது

கடை ஊழியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மகன் கைது

திருநெல்வேலி,:திருநெல்வேலி மத்திய மாவட்டம் பாளை., பகுதி தி.மு.க., செயலாளராக இருப்பவர் ஆன்டன் செல்லத்துரை. இவரது மகன் ஆல்வின் 22.நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பீட்சா உள்ளிட்டவை இருக்கும் துரித உணவகத்திற்கு சென்றார். கடைக்கு வெளியே காரில் அமர்ந்து கொண்டு ஒரு ஊழியரிடம் பீட்சா ஆர்டர் செய்து கொண்டு வரும்படி கூறினர். அவருடன் 16 வயது சிறுவன் ஒருவரும் இருந்தார்.ஊழியர் நாராயணன் பீட்சா கொண்டு வந்தார். ஏன் இவ்வளவு தாமதம் என கேட்டு ஆல்வின், அந்த கடை ஊழியரை கடுமையாக தாக்கினார். பட்டியலினத்தைச் சர்ந்த நாராயணன் புகாரில் ஆல்வின், 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 08:20

திமுக செயலாளர் ஆண்டன் தனது மகன் செய்த ஈன செயலால் மனமுடைந்து ஒரு தமிழர் மன்னன் போல ... என்றெல்லாம் படிக்கவே முடியாது


சமீபத்திய செய்தி