துப்பாக்கி மாயம்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் ராஜகுமார் 33, என்பவர் விளையாட்டு மையம் நடத்தி வருகிறார். அங்கு அவர் வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியை காணவில்லை. இதுகுறித்து அவரது புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.