உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணிக்கு மேக்கப் போட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் டோஸ்

தாமிரபரணிக்கு மேக்கப் போட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் டோஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேற்று ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.புகழேந்தி ஆகியோர், ஆற்றை, 'மேலோட்டமாக மேக்கப்' செய்த அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்டனர். ஆற்றை முழுமையாக பாதுகாக்க, செயல் வரைவு திட்டத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து அறிய, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், நேற்று திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொண்டனர். வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, டி.ஆர்.ஓ., சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

என்ன திட்டம்?

பின், சாக்கடை கழிவுநீர் கலக்கும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். ஜங்ஷன் மீனாட்சிபுரம் பகுதியில் சாக்கடை நீர், ஆற்றில் கலக்காமல் இருக்க சிமென்ட் தொட்டி போல அமைக்கப்பட்டதை பார்வையிட்டனர்.நீதிபதிகள் வருவதால் அங்கு வெள்ளையடிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்திருந்தது. அதை கவனித்த நீதிபதி சுவாமி நாதன், ''ஏன் இந்த, 'மேக்கப்' செய்துள்ளீர்கள். இத்தனை, 'பில்டப்' ஏன்? நீதிபதிகள் வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டீர்களா?,'' என்றார்.மேலும், 'தாமிரபரணியை பாதுகாக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?' என, நீதிபதிகள் அதிகாரிகளிடம் கேட்டனர். மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா அறிக்கை குறித்து கூறினார். இதுபோன்ற அறிக்கைகளை கேட்டு காது புளித்து விட்டதாக கூறிய நீதிபதிகள், 'தாமிர பரணியை பாதுகாக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்துங்கள்' என்றனர்.

கலெக்டருக்கு உத்தரவு

பல பகுதிகளை ஆய்வு செய்த பின், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் பழங்கால மண்டபங்கள், படித்துறைகளை சீர் செய்ய அறிவுறுத்தினர்.தாமிரபரணியில், பாபநாசம் முதல் ஆத்துார் வரை பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. நேற்றைய ஆய்வு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடந்ததால் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா சிக்கிக்கொண்டார்.ஆய்வின் போது அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்த்த கமிஷனர் சுகபுத்ராவிடம், 'என்ன 'வாட்ச்'சை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; நேரமாகிவிட்டதா; இன்று அனைத்து இடங்களையும் பார்த்த பிறகு தான் மதிய உணவு' என்றனர் நீதிபதிகள்.நிறைவாக நீதிபதிகள், 'தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 'இதை முழுமையாக நிறைவேற்ற தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, கால அவகாசம் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 05:40

தமிழகத்தில் மனிதர்கள் ஆட்சியா நடக்கிறது , தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்றொரு சொலவடை உண்டு , இப்போ கண்டேன் , விடியவே விடியாத மாநிலமாக தமிழக , பிரஷாந்த் கிஷோர் ஒழிக , சசிகாந்த் செந்தில் முன்னாள் IAS ஒழிக , இவர்களால் தான் தமிழகம் இருந்து கிடக்கிறது


சாண்டில்யன்
நவ 11, 2024 15:34

பல காலமாக இந்த நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதால் வந்த வினைதானே என்று ஊருக்கு இளைத்தவன் திமுக வேலை முடிந்தால் திமுகவை வீசியெறிந்துவிட தமிழக மக்கள் தயாராகிவிட மாட்டார்களா


Gokul Krishnan
நவ 11, 2024 15:20

இருந்தாலும் தென் சென்னை கிழவி அளவுக்கு தாமிரபரணிக்கு மேக் அப் காணாது


சாண்டில்யன்
நவ 11, 2024 18:03

இன்னொன்னு போட்டிக்கு மேக்கப் போட்டு அங்கே பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாய் வந்ததை பார்த்தோமே பிள்ளைகள் பயந்துபோய் ஜூரமே வந்துவிட்டது


sankar
நவ 11, 2024 09:18

அரசியல்வாதிகள் & அதிகாரிகளால் இந்த நாடு இன்னுமொரு எத்தியோப்பியாவாக மாறப்போகிறது


Dharmavaan
நவ 11, 2024 08:01

மக்களை ஏமாற்றி இலவசங்களை கொடுத்து ஒட்டு வாங்கி கொள்ளை அடிக்கும் ஸ்டாலின் கூட்டம் இந்த நல்ல காரியங்களை செய்யுமா ,என்று ஒழியும் இந்த குடும்ப ஆட்சி


Mani . V
நவ 11, 2024 06:16

திராவிட மாடல்னா சும்மாவா?


புதிய வீடியோ