இருட்டுக்கடை வரதட்சணை புகார் கணவர் ஆஜராக போலீஸ் சம்மன்
திருநெல்வேலி:இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா அளித்த புகாரில் கணவர் பல்ராம் சிங் ஏப். 21ல் திருநெல்வேலி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.திருநெல்வேலி டவுன் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாசிங் மகள் கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த யுவராஜ் சிங் மகன் பல்ராம் சிங்கிற்கும் பிப்ரவரி 2ம் தேதி திருநெல்வேலியில் திருமணம் நடந்தது. 41 நாட்கள் மட்டுமே கனிஷ்கா கோவையில் வசித்த நிலையில், கணவர் குடும்பத்தினர் வரதட்சணையாக தமது பெற்றோர் நடத்தி வரும் இருட்டுக்கடையை எழுதி தர கேட்டதாக புகார் கூறினார். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரிக்கிறார். இந்த போலீஸ் நிலையத்தில் பல்ராம்சிங் ஏப்.21ல் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.