உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் போலீஸ் ஸ்டேஷன் மீது ரவுடிகள் பெட்ரோல் குண்டு வீச்சு; கஞ்சா வழக்கில் இருவரை கைது செய்ததால் ஆத்திரம்

நெல்லையில் போலீஸ் ஸ்டேஷன் மீது ரவுடிகள் பெட்ரோல் குண்டு வீச்சு; கஞ்சா வழக்கில் இருவரை கைது செய்ததால் ஆத்திரம்

திருநெல்வேலி; திருநெல்வேலியில் இருவரை போலீசார் கைது செய்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் 5 பேர், பட்டப்பகலில் டூவீலர்களில் சென்று தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசினர். திருநெல்வேலி, தச்சநல்லுார் அருகே ஊருடையான் குடியிருப்பு காட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து சென்ற தச்சநல்லுார் எஸ்.ஐ., மகேந்திர குமார் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் அரிவாள்கள் இருந்தன. இவர்கள் தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவராக செயல்படும் கண்ணபிரான் ஆதரவாளர்கள் ஆவர். அவர்களை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீச்சு இதற்கு போலீசை பழிவாங்கும் வகையில் கைதான அருண்குமாரின் தம்பி அஜித்குமார் 30, மற்றும் பெருமாள் 27, கிருஷ்ண பெருமாள் 19, வல்லவன் கோட்டை அருண் 22, சரண் 19, ஆகிய 5 பேர் நேற்று மதியம் இரண்டு டூவீலர்களில் வந்தனர். தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள ஒரு கோயில் சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். பின்னர் திருநெல்வேலி- - மதுரை சாலையில் கரையிருப்பு பகுதியில் சோதனை சாவடி அருகே இருந்த தடுப்பு இரும்பு பலகைகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதனையடுத்து தாழையூத்து ---- மானுார் சாலையில் தென்கலம் கிராமத்திலும் வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள கோயிலில் குண்டு வீசிய பகுதியில் தடய அறிவியல் துணை இயக்குனர் ஆனந்தி தலைமையில் அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். ஐந்து பேர் பெட்ரோல் குண்டுகளை வீசுவது, பின்னர் அவர்கள் டூவீலர்களில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியானது. ஜாதி கும்பல் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்' திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சில ஜாதி அமைப்புகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை போன்றவற்றில் ஈடுபடுவதற்காகவும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இதில் பயன்படுத்துகின்றனர். நேற்று முன்தினம் கஞ்சா வழக்கில் இருவரை கைது செய்ததால் அதில் ஒருவரின் தம்பி உட்பட 5 பேர் குண்டு வீசி உள்ளனர். இவர்கள் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்களில் அஜித்குமார் உள்ளிட்டவர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் முந்தைய வழக்குகள் உள்ளன என்றனர். இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என துணை கமிஷனர் பிரசன்ன குமார் தெரிவித்தார். இதனிடையே சரண் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ellar
அக் 13, 2025 21:48

கமிஷனர் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் .....இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து மூன்று நான்கு இடத்தில் வீசி இருப்பதனால் இவர்களை கூட்டிக்கொண்டு சென்று அந்தந்த இடத்தில் எப்படி நடந்தது என்று அவர்களே விளக்கிக் கூறுமாறு செய்து , முடிந்த அளவுக்கு மாவுக்கட்டு அல்லது வழக்கமான பரிசை கொடுத்து விட வேண்டும்... அப்பொழுதுதான் எல்லாரும் போலீசை மதித்து சட்டத்தை மதித்து நடந்து கொள்வார்கள். இவர்களின் கடந்த கால நடவடிக்கைகளும் சரியில்லாமல் இருப்பதினால் ஒரு பெரிய தலைவலியாக தான் இவர்கள் எதிர்காலத்தில் உருவாவார்கள்


ram
அக் 13, 2025 12:11

ரௌடிகள் என்று அவர்களை இழிவு செய்யாதீர்கள் மனித ஆர்வலர்கள் என்று சொல்லவும்.


shyamnats
அக் 13, 2025 08:41

சிறப்பான விடியல் ஆட்சி. காவல் நிலையங்களை , காவலர்களை பாதுகாக்க புதிய துறை கட்டமைப்புக்கள் உருவாக்க படும்.


Mani . V
அக் 13, 2025 05:48

எந்தக் கொம்பனும் குறையே சொல்ல முடியாத அப்பாவின் எழவு மாடல் ஆட்சியின் சாதனை. காவல்துறையினருக்கே அதுவும் அப்பாவின் துறையினருக்கே பாதுகாப்பில்லை. இதில் எட்டுக் கோடி மக்களைக் காப்பதுடன், உலக மக்களையும் காப்பாற்றப் போகிறாராம்.


Senthoora
அக் 13, 2025 05:46

அணில் குஞ்சுகளும் தாதானே சொல்லுது, நாம்ம தலைவரை கைது செய்தால் இதைத்தான் செய்வோம் என்று.


முக்கிய வீடியோ