உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

திருநெல்வேலி:நாங்குநேரி அருகே தகராறில் அண்ணன் மனைவியின் இடது காதை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் தங்கப்பெருமாள் 33. அண்ணன் சுடலைமணி 35. இருவரது வீடும் அருகருகே உள்ளன.அண்ணன் வீட்டு மின் வயர் தங்கப்பெருமாள் வீட்டின் மேல் சென்றது. இது தொடர்பாக தங்க பெருமாள் அண்ணன் மனைவி ஹனி டில்டாவிடம் தகராறு செய்தார்.ஹனி டில்டா 29, கையில் கத்தியை எடுத்தார். தங்க பெருமாள் அரிவாளால் அவரது இடது காதை வெட்டினார். காது துண்டாகி விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏர்வாடி போலீசார் தங்கப்பெருமாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை