உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாய் சடலத்தை 18 கி.மீ., சைக்கிளில் கொண்டு சென்ற மகன்: திருநெல்வேலியில் நெஞ்சை பதறச் செய்த சம்பவம்

தாய் சடலத்தை 18 கி.மீ., சைக்கிளில் கொண்டு சென்ற மகன்: திருநெல்வேலியில் நெஞ்சை பதறச் செய்த சம்பவம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயது மூதாட்டி இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டதால் இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்றார் மகன்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த ஜெபமாலை மனைவி சிவகாமியம்மாள் 65. மூன்று மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார் இரண்டாவது மகன் செல்வம் இறந்துவிட்டார். மூன்றாவது மகன் பாலன் 38 ,தாயை கவனித்து வந்தார். சிவகாமிக்கு தீவிர மன சிதைவு நோய் இருந்தது. இதற்காக அடிக்கடி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ls0lcvb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாமியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்திருந்தார். நேற்று காலை அவரது உடல்நிலை சீரியஸ் ஆனது. எனவே வேறு நபரை அழைத்து வரும்படி மருத்துவமனையில் பாலனிடம் கூறினர். உதவிக்கு யாரும் இல்லாததால் அவர் தவித்தார். எனவே சாகும் தருவாயில் தமது தாயாரை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தாயாருக்கு காபி வாங்கி கொடுத்தார் அப்போதே காபி உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். ந நேற்று காலை 11 மணியளவில் இறந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாத பாலன் மாலையில் தமது சைக்கிளில் கட்டி உருட்டியபடியே தமது ஊருக்கு எடுத்துச் சென்றார்.திருநெல்வேலி நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் நாங்குநேரிக்கு முன்னதாக மூன்றடைப்பு பகுதியில் இரவு 10 மணி அளவில் அவர் ஒரு சடலத்துடன் செல்வதை பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.மூட்டைபோலீசார் அவரை வழிமறித்து விசாரித்தனர். தாயார் இறந்திருப்பதை உறுதி செய்தனர். எனவே ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இன்று பிரேத பரிசோதனைக்கு அப்புறம் பிறகு உடல் பாலன் மற்றும் அவரது அண்ணன் சவரிமுத்து அழைத்து ஒப்படைக்கப்பட்டது.பரிதாபம்பாலனுக்கும் மனநலம் பாதிப்பு இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வறுமையில் இருந்தார். எனவே வீட்டுக்கு உடலை கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து தமது வீட்டுக்கு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரம் தாயின் உடலை சைக்கிளின் பின் கேரியரில் வைத்து கட்டி வைத்து உருட்டியபடியே சென்றது பார்த்தவர்களை கண்கலங்க செய்தது. அதில் யாரோ தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிக்கு இல்லாதவர்கள், வறியவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, தானாக தாங்களாகவே வெளியே சென்றார்கள் என கணக்கு காட்டி அனுப்புவதில் தீவிரமாக உள்ளனர். நேற்றும் சிவகாமி அம்மாள் அப்படித்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கூறுகையில், 'பாலன் தன் தாயாரை அழைத்துச் செல்வதாக பிடிவாத்துடன் கேட்கும் போது நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை எனவே அவரை அனுப்பி வைத்தோம் அவர் இறந்தது எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

மா.ப.சாமி
ஜன 25, 2025 10:30

வாழும் போதுதான் நிம்மதி இல்லை. மரணத்திலாவது நிம்மதி கொடு இறைவா...


Mohan
ஜன 25, 2025 08:32

தமிழ் நாட்டு மக்கள் ரொம்...ப நல்லவங்கப்பா. சினிமாவிலும் ,இலக்கியத்திலும் அவர்கள் நம்புவது...இதுதான்...... அது தென் தமிழ் நாட்டு மக்கள் மனித நேயம் மிக்கவர்கள்... மதுரை, நெல்லை...மக்களோட பாஷை மட்டுமல்ல நடவடிக்கைகளும் வெள்ளந்தியானது....... இன்னும் பல.. விடியல் தலைவர் கருணாநிதி எங்களுக்கு அரசு பதவிகள்,அரசியல் பதவிகள், மேற்படி வருமான வசதிகள், நில புலன்கள் மீதான வசதிகள் ஆகியவை தந்ததால் 58 வருடங்களாக திராவிட விடியல்காரர்களுக்கே ஓட்டு போடுகிறோம் .... அதனால் நாங்க நல்...லா இருக்கோம், சம்பாதிக்கிறோம் மறுபடி மறுபடி ....அவங்களுக்கே ஓட்டு போடுவோம், எல்லா .....சவுகரியமும் பெறுவோம்..... நீங்க கருணாவோட தலைமையை ஏத்துக்காதவங்க... அம்மாவுக்கு ஓட்டு போட்ட.. சாதாரண......ஏழை.....ஜனங்க..அதனால உங்களுக்கு..... எந்த வித பதவி, பணம், சவுகரியம் கிடைக்கணும்னா.... நீங்க கள்ளச் சாராயம் குடிக்கணும், உதவிப்பணம் 1000 கிடைக்க வெயில்ல கியூவில நிக்கணும் ,""ஓசி"" டிக்கட் வாங்கி பஸ்ல போகணும், வைத்தியம் பண்ணிக்க அரசு ஆஸ்பத்திரியில் தரையில பாய்ல படுக்கணும், அம்மாவோ, சொந்தமோ செத்துட்டா, நீங்களே சைக்கிள்ல தூக்கிட்டு போகணும். ..... ... தமிழர்களை.... வாழாமல் வீழ வைத்...த ... அகில உலகம் ... போ...ற்றும்......தி...ராவிட ...மாடல் வாழ்க


Narayanan K
ஜன 25, 2025 07:09

This is the unfortunate and sad state of affairs of poor people. Govt has to and should always work for the welfare of such people but unfortunately that is not happening. The rulers are very much active to safeguard their interest and wealth of their family. People are left to dying on road. Very sad. May God bless the poor family. Help should be provided.


Sankare Eswar
ஜன 25, 2025 06:52

டாய் திராவிட பாராக்கி பயல்களா , இது என்னடா மடல் ஜல்லிக்கட்டு உருட்டு மடையர்களா... அடுத்த வெளிநாட்டு டூர்ல உன் பொண்டாட்டி புள்ள பேரனோட விமானத்துல வெடிச்சிதாண்டா தீபாவளி கொண்டாடுவீங்க.


Svs Yaadum oore
ஜன 25, 2025 06:08

தமிழ் நாட்டில் பாலும் தேனும் அப்படியே ஆறாக பெருகி ஓடிக்கொண்டிருந்ததாம் ..இப்பொது வடக்கன் மாநிலம் போல நின்னு போச்சாம் ....


ராஜமாணிக்கம்
ஜன 25, 2025 05:48

என் அண்ணனையும் இப்படி தான் இறக்கும் தருவாயில் ICU வில் இருந்து கூட்டி செல்ல கடுமையாக நிர்பந்தம் செய்தார்கள், நாங்கள் உடன்பட வில்லை. 37 நாட்களில் trips மட்டுமே போட்டார்கள் . எந்த ஒரு சிகிச்சையுமே கொடுக்க முன்வர வில்லை


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:32

விடிஞ்சுருச்சா ? சர்வாதிகாரி ஆட்சியில் ஏழைகள் படும்பாடு , பிரியாணி பாய் மாற்றுமத வழிபாட்டு தளத்த்தை ஆக்ரமித்து தின்னுகிறான் அதனை கண்டிக்க துப்பில்லை , வறிய தமிழன் மருத்துவமனையில் மனசிதைவு நோயால் பாதிக்கப்படுகிறான் அதனை சரிசெய்ய தவறிய அரசு இருந்தென்ன போனாலென்ன ? எந்த கோட்டாவை கொண்டு படித்தார்களோ அந்த மருத்துவமனை ஊழியர்கள் , அவர்களுக்கு அரசு பனி இன்னமும் தேவையா , அந்த கோட்டா இன்னமும் தேவையா ?


Krishna
ஜன 25, 2025 00:06

Cannot tolerate. Not even my worst enemy wouldn't get this punishment. As a father of special child, I really about this society we live and my child going to thrive in. Government doctors neither have patience nor have good facilities


KRISHNAN R
ஜன 24, 2025 22:42

என்ன சொல்வது..... ஆன்லைன் ஆப் லைன் இலவச ஊர்தி...எல்லாம்....?????


RAAJ68
ஜன 24, 2025 22:13

மனிதநேயம் இல்லாத அரசு மட்டுமில்லை மனிதநேயம் இல்லாத வேடிக்கை பார்க்கும் மக்களும் தான் எல்லோரும் சேர்ந்து ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுக்க முடியாதா எவ்வளவு வணிகர்கள் உள்ளனர் வழியெல்லாம். யாருமே உதவ மாட்டார்களா. புகைப்படம் எடுத்து இந்தியாவில் போடுபவர்கள் ஒரு வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய முடியாதா.


புதிய வீடியோ