உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு

திருநெல்வேலி: குப்பையை முறையாக கையாளாத திருநெல்வேலி மாநகராட்சிக்கு, 1.26 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பரிந்துரை செய்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி குப்பை சங்கரன்கோவில் சாலையில் உள்ள ராமையன்பட்டி கிடங்கில் கொட்டப்படுகின்றன. பாதாள சாக்கடை கழிவுநீரும் குழாய்கள் மூலம் அங்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது. கடந்த ஜூலையில் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து எரிந்த குப்பையால், மாநகராட்சி பகுதி முழுதும் காற்று மாசு ஏற்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஜூலை 16ம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்டனர். குப்பையை முறையாக பிரித்து கையாளாதது தெரியவந்தது. கடந்த 2016ல் வெளியிடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை, 2020 மார்ச் 31க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த தவறிய மாநகராட்சிக்கு 2020 ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை 63 மாதங் களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, குப்பையை முறையாக அகற்றாததற்கும், 63 மாதங்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டையும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 26 லட்சம் ரூபாயை வசூலிக்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருஷ்ணபாபு வாரிய தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன், தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட கடிதத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இந்த பதிலை அளித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து பல்வேறு பகுதிகளில் சாக்கடைகள், தாமிரபரணியில் நேரடியாக விடுவதை கண்டித்தும் கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சிக்கு, 1.55 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N S
அக் 28, 2025 11:31

"2020 ஏப்ரல் முதல்" பழைய பாக்கிதான். "ஸ்மார்ட் சிடி" லெவலே வேற.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 28, 2025 10:12

தப்பு செய்த அதிகாரிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு அபராதம் விதிப்பது என்பது அவர்களை காப்பாற்றும் செயல். அல்லது அந்த அபராதத்தை அதிகாரிகளின் சொத்துக்களையோ, மாத சம்பளத்தையோ பறிமுதல் செய்து ஈடு செய்ய வேண்டும். இந்த திருட்டு அரசும் அதன் திருட்டு அதிகாரிகளும் குற்றம் செய்தவனை பாதுகாப்பதையே பொழப்பாக வைத்திருக்கின்றனர். எங்கேயாவது தப்பு செய்தவனை தண்டிப்பதை விட்டுவிட்டு மக்கள் பணத்தை அபராதமாக வசூலிப்பார்களா? இந்த அறிவு கூட இல்லாதவனை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துவிட்டு மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.


T. Murugan
அக் 28, 2025 16:56

நாகரிகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது மக்களிடையே பெருகி கொண்டிருக்கிறது.. எல்லா தொழிலுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பிளாஸ்டிக்..பிளாஸ்டிக்.... குப்பையில் கிடைக்கும் முக்கியமான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக். கவர்கள் பிளாஸ்டிக் .சப்பல்கள் பிளாஸ்டிக் . பள்ளி பேக் பிளாஸ்டிக். பாய்கள் பிளாஸ்டிக் பிளக்ஸ் பிளாஸ்டிக்.. குடிக்கட்டி வாங்க பிளாஸ்டிக் எந்த பொருள் வாங்குவதற்கு பிளாஸ்டிக் பிளாஸ்டிக்... இப்படி பண்றது எல்லாம் பொது மக்களாகிய நாம் தான் நாம் திருந்திர வரைக்கும் ஒன்னும் மாறாது.


shyamnats
அக் 28, 2025 08:46

அபராதம் விதிக்க படுவது எல்லாம் சரி, மாநகராட்சிகளால் எப்போதாவது கட்டப்பட்டிருக்கிறதா என்ற தகவலும் தெரிந்தால் நன்றாயிருக்கும். மேலும் அநேகமாக அணைத்து நகரங்களிலும், அடிப்படை வசதிகள் - சாலை, தண்ணீர், கழிவுகள் நீக்கம் - சரியாக இல்லை


N S Sankaran
அக் 28, 2025 07:39

இந்த அபராதமெல்லாம் மக்கள் தலையில் தானே ஏறும்? மாநகராட்சி அபராதம் கட்டி விட்டு பிற நகர முன்னேற்ற பணிகளுக்கு காசில்லை என்று கையை விரிப்பார்கள். இது எந்த வகையில் நியாயம்? பல முறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை தண்டிப்பது தானே நியாயம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை