மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : சிங்காரத்தோப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கப்பட்டது.சிங்காரத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பத்ரகாளி அம்மாள் அறக்கட்டளை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜோசப்மரியராஜ் தலைமை வகித்தார். சமூகரெங்கபுரம் பஞ்.,தலைவர் வெள்ளையம்மாள், ஒன்றிய கவுன்சிலர் செழியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாமுவேல் ஜெயபராஜ் வரவேற்றார்.அறக்கட்டளை தலைவர் பத்பநாதநாடார் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பயிற்சி ஆசிரியைகள் சுபா, செல்வி, நளினி செய்திருந்தனர். உதவி ஆசிரியை இந்திராள் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025